வெப்பச்சலனம் காரணமாக, இன்று ( மே 27, 2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான
மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள
வானிலை ஆய்வு மையம்,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகப்பட்டினம்,
மயிலாடுதுறை,
கள்ளக்குறிச்சி,
பெரம்பலூர்,
அரியலூர்,
கடலூர்,
திருச்சி,
சேலம்,
நாமக்கல்,
நீலகிரி,
கோவை,
திருப்பூர்,
தேனி,
திண்டுக்கல் மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
நாளை (மே-28) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மே 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
வால்பாறை PAP (கோவை) 6, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), கெட்டி (நீலகிரி), வானமாதேவி (கடலூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), புதுச்சேரி (புதுச்சேரி), சூரளக்கோடு (கன்னியாகுமரி), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), குடிதாங்கி (கடலூர்) 5 தலா, ஆண்டிபட்டி (தேனி), கடலூர் (கடலூர்), வைகை அணை (தேனி), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 4,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சின்கோனா (கோவை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கொடைக்கானல் (திண்டுக்கல்), சின்னக்கல்லார் (கோவை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), காஞ்சிபுரம் ISRO (காஞ்சிபுரம்), மதுரை ISRO (மதுரை) தலா 3,
பண்ருட்டி (கடலூர்), வால்பாறை PTO (கோவை), பேரையூர் (மதுரை), மாரண்டஹள்ளி (தருமபுரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), தளி (கிருஷ்ணகிரி), வானூர் (விழுப்புரம்), ஆம்பூர் (திருப்பத்தூர்), துவாக்குடி (திருச்சி), உதகமண்டலம் (நீலகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்) தலா 2,
Must Read : ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்... மாறி மாறி ஒலித்த கோஷம்!
விரகனூர் அணை (மதுரை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), கோத்தகிரி (நீலகிரி), ஏலகிரி ARG (திருப்பத்தூர்), கிளென்மார்கன் (நீலகிரி), சோலையார் (கோவை), அன்னூர் (கோவை), குன்னூர் (நீலகிரி), திண்டுக்கல் (திண்டுக்கல்), பெரியகுளம் (தேனி), சித்தம்பட்டி (மதுரை), தல்லாகுளம் (மதுரை), மதுரை தெற்கு (மதுரை), கொடுமுடி (ஈரோடு), செய்யூர் (செங்கல்பட்டு), துறையூர் (திருச்சி), சமயபுரம் (திருச்சி), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
இன்று வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மே- 29, 30 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு அரபிக்கடல், இலட்சதீவு, தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வுமையம் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.