யாரை வேவு பார்க்கப்பட்டது என்பதை நாட்டிற்கு மத்திய அரசு சொல்ல வேண்டும் என நாடளுமன்ற திமுக குழு தலைவா் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து நாடளுமன்ற திமுக குழு தலைவா் டி.ஆர்.பாலு, திமுக மகளிர் அணி செயலாளா் கனிமொழி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை வந்தனர்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு பேசுகையில், இஸ்ரேலை சேர்ந்த 3 பேர் கண்டுபிடித்த உளவு பார்க்கும் மென்பொருளை பல நாடுகளுக்கு விற்று உள்ளனர்.
பெகாசஸ் செயலியை வாங்கிய நாட்டினர் தங்களுடைய அரசியல் எதிரிகள், நீதித்துறையினர், பத்திரிக்கையாளர் உள்பட சிலரை வேவு பார்க்கின்றனர். இது தவறு என்று கடந்த 2 வாரங்களாக பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி கொண்டு வருகிறோம்.
Also read: உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக முடிவு?
மத்திய அரசு எந்த விவகாரமாக இருந்தாலும் அதை பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் எதிர்கட்சிகள் இரு அவையிலும் நோட்டீஸ் தந்து உள்ளோம். பெகாசஸ் உள்பட பல விவகாரங்கள் குறித்து நோட்டீஸ் தந்து உள்ளோம். பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என கேட்டுகிறோம். இது தேச நலனுக்கு எதிரானது. தனி நபரின் படுக்கை அறையில் என்ன நடக்கிறது என்பதையும் வேவு பார்க்க முடியும். உரிமைகள், நாட்டின் சுதந்திரம் பறிப்போகிறது. தேசிய நலனுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் விவாதிக்க வேண்டும் என கேட்டுகிறோம்.
ஆனால் மத்திய அரசு கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி கொண்டு தான் இருக்கிறோம். இந்திய நாட்டிற்கு வேவு செயலியை தந்து இருப்பதாக சான்பிரான்சிஸ்கோவில் அபிடவிட் பதிவு செய்து உள்ளனர். இந்தியாவில் தீவிரவாதிகளை உளவு பார்த்தீர்களா அரசியல்வாதிகளை உளவு பார்த்தீர்களா யாரை உளவு பார்த்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும். நாட்டிற்கும் நாடாளுமன்றத்திலும் சொல்ல வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேகதாது அணை கட்டுவதற்கு வாய்ப்பே கிடையாது. விரைவு திட்ட அறிக்கை அனுமதி தந்தது தவறு. காடுகள் இருக்கின்றன. தேசிய இயற்கை வளங்கள் பாதிக்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சியினர் போராட்டம் நடத்துவது வாடிக்கை. நாங்கள் ஆளும்கட்சியாக இருக்கிறோம். எதிர் கட்சியினர் போராட்டம் நடத்தட்டும். ஜனநாயகத்தின் உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.