முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல... நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..!

விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல... நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..!

நளினி

நளினி

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தன்னை விடுதலை செய்யக் கோரி ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யமால் சட்டவிரோத அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம் கான் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஏழு பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்து, 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதமே உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பேரறிவாளன் ஆளுநரிடம் கருணை மனு நிலுவையில் உள்ளதாகவும், அதில் சட்டப்படி முடிவெடுக்க ஆளுனருக்கு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு பேர் விடுதலை முடிவை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்ததால், பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுனர் முடிவெடுக்கலாம் என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆள்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கை வாதங்களுக்காக பிப்ரவரி 12 தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also see...

First published:

Tags: Nalini, Rajiv convicts, Rajiv death case