சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திவரும் நிலையில், இந்த சோதனையில் ஒன்று கிடைக்கவில்லை என்றும் எஃப்.ஐ.ஆரில் தனது பெயர் இல்லை என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த சோதனை நடைபெறும் காலம் மிகவும் சுவாரஸ்யமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு, ஏர்டெல்-மேக்சிஸ் முறைகேடு ஆகியவை தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு ஏற்கனவே சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லம், மும்பை, டெல்லி என 7 முதல் 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் மாநாட்டில் அண்மையில் பேசிய ப.சிதம்பரம் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்த நிலையில், இந்த சோதனை நடைபெறுவதாக காங்கிரஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில், சிபிஐ சோதனை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: Karti P chidambaram: சிபிஐ சோதனை.. எத்தனை முறைதான் நடத்துவார்கள்: கார்த்தி சிதம்பரம் ட்விட்
அதில், இன்று காலை சென்னையில் உள்ள எனது இல்லத்திலும், டெல்லியில் உள்ள எனது அதிகாரப்பூர்வ இல்லத்திலும் சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர். குழு எனக்கு ஒரு எஃப்ஐஆர் காட்டியது, அதில் என் பெயர் இல்லை. சோதனையில் அதிகாரிகள் எதையும் கண்டுபிடிக்கவும் இல்லை, எதையும் பறிமுதல் செய்யவும் இல்லை. இந்த சோதனை நடைபெறும் காலம் என்பது மிகவும் சுவாரஸ்யமானது’ என குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBI raid, P.chidambaram