குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை
குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை
பி.வி.ரமணா
குட்கா முறைகேடு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன், முன்னாள் வணிகவரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் நேற்று விசாரணை நடைபெற்றது.
குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா சிபிஐ அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக ஆஜராகியுள்ளார்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு லஞ்சம் வழங்கியதாக குட்கா நிறுவன அதிபர் மாதவ ராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த முறைகேட்டில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன், முன்னாள் வணிகவரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியது.
இதையடுத்து, அவர்கள் மூவரும் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர். மூன்று பேரிடமும் நேற்று 12 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ அறிவுறுத்தியதன் பேரில், முன்னாள் அமைச்சர் ரமணா இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் காலை 11 மணி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
Also watch
Published by:DS Gopinath
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.