முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு.. மத்திய அமைச்சர் சொன்ன அப்டேட்..!

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு.. மத்திய அமைச்சர் சொன்ன அப்டேட்..!

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம்

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம்

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

தமிழ்நாடு முழுவதும் பரவலான பாசன வசதி பெறும் வகையில் காவிரி-வைகை-குண்டாறை இணைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த திட்டத்துக்கு கடந்த அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில், நதிநீர் இணைப்பு திட்டங்கள் தொடர்பாக மக்களவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அப்போது, காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2.83 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Cauvery River, Vaigai