கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஒரு இடத்தில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், பொங்கல் நேரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது, போட்டியாளர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என எவரும் தனிமனித விலகலை பின்பற்றவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஒரு இடத்தில் 10 பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருப்பதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தவில்லை என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டுமெனவும், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு ஏற்கனவே விதிகளை அறிவித்துள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
Also read... கோவை மாநகராட்சியில் வேட்பு மனுக்கள் பெறப்படுவற்கான ஏற்பாடுகள் தயார்!
10 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லாமல் விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என கூறிய நீதிபதிகள், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர்.
இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கே.கே.ரமேஷ் தெரிவித்ததை ஏற்று, வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Madras High court