நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வரும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்று சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 21ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏராளமான ஆண்கள் பெண்கள் இன்றும் கலந்துகொண்டுள்ளனர். திருப்பூரில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கில், அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேசி போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். ஆனால், அதற்குப் போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். திருப்பூரில் நடந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறுதான் நீதிபதி சொல்லி இருப்பதாக காவல்துறையிடம் அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று வழங்கிய தீர்ப்பை இன்றைக்கு நீதிமன்றம் தெளிவுபடுத்தவுள்ளது. அது வரையில் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் உத்தரவை தாங்கள் மதிப்போம் என்றும் நல்ல தீர்ப்பு கிடைக்குமென்றும் அவர்கள் கூறினர்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.