மன்னிப்பு கோரினார் சைதை சாதிக்
பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுக பொதுக் கூட்டத்தில் ஆபாசமாக பேசியதாக சைதை சாதிக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்ற உத்தரவையடுத்து மன்னிப்பு கோரினார் சைதை சாதிக்.
பிரமாண பத்திரத்தை ஏற்று நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. விசாரணை அதிகாரி முன்பு ஒரு வார காலத்திற்கு ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை.