ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரி - மு.க.ஸ்டாலின்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | July 30, 2022, 11:26 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 10 MONTHS AGO

    AUTO-REFRESH

    11:21 (IST)

    ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரி -  மு.க.ஸ்டாலின்

    கேரளா மாநிலம் திருச்சூரில் நடைபெறும்  மனோரமா நியூஸ் நடத்தும் கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

    பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழி வாரி மாநிலங்களை உருவாக்கி கொடுத்தவர் நேரு. இந்தி ஒருபோதும் திணிக்கப்படாது என்று உறுதிமொழி அளித்தார் ஜவஹர்லால் நேரு. இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள் உள்ளனர், பல கலாச்சாரம் கொண்ட மக்கள் உள்ளனர். ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரி என்று கூறினார்.

    10:40 (IST)

    நெடுஞ்சாலை துறை அதிகாரி சஸ்பெண்ட்

    ரூ 1,829 கோடி நெடுஞ்சாலை துறை ஒப்பந்த முறைகேடு  தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரி பழனி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் 2010 -2021 சாலை பராமரிப்பு ஒப்பந்தத்தில் முறைகேடு எனப் புகார். 

    10:33 (IST)

    மின்சாரம் தாக்கி 3பேர் உயிரிழப்பு

    விருநகர் மாவட்டம் மானாமதுரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. முயல் வேட்டைக்கு சென்றபோது பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியை மிதித்ததில் உயிரிழந்ததாக தகவல்

    7:41 (IST)

    அரசுப்பேருந்து விபத்து -  ஓட்டுநர், நடத்துனர் உயிரிழந்த பரிதாபம

    சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சின்னார் அருகே முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்து. இதில் அரசு பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன் நடத்தினர் முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பயணிகள் சிலர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    7:41 (IST)

    அரசுப்பேருந்து விபத்து -  ஓட்டுநர், நடத்துனர் உயிரிழந்த பரிதாபம

    சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சின்னார் அருகே முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்து. இதில் அரசு பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன் நடத்தினர் முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பயணிகள் சிலர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    7:17 (IST)

    கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு..!

    நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு

    7:16 (IST)

    வணக்கம் நேயர்களே..!
    இன்று ஜூலை 30 (சனிக்கிழமை) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்