Tamil News Live : இந்தி திணிப்பை கைவிடுக! - பிரதமருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்

Breaking News, Today (October 11, 2022 - Tuesday): செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | October 11, 2022, 21:16 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A YEAR AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    21:13 (IST)

    இந்தி திணிப்பை கைவிடுக! - பிரதமருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்

    உயர்கல்வியில் இந்தியை மட்டுமே பிரதான மொழியாக திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசின் இந்த முயற்சி இந்தியாவின் பண்முகத்தன்மைக்கு எதிரானது. இது பெரும்பான்மை இந்தியர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பாதிக்கும். இந்தி திணிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.

    - பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

    21:13 (IST)

    இந்தி திணிப்பை கைவிடுக! - பிரதமருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்

    உயர்கல்வியில் இந்தியை மட்டுமே பிரதான மொழியாக திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசின் இந்த முயற்சி இந்தியாவின் பண்முகத்தன்மைக்கு எதிரானது. இது பெரும்பான்மை இந்தியர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பாதிக்கும். இந்தி திணிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.

    - பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

    19:35 (IST)

    போராட்டத்தில் ஈடுபடும் கவுரவ விரிவுரையாளர்கள் டிஸ்மிஸ் - கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவு

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மாற்றாக உரிய தகுதியுடன் இருக்கும் கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கவும் கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

    18:40 (IST)

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று இந்தியா அசத்தல்!

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    17:50 (IST)

    ஏக்நாத் தலைமையிலான சிவ சேனாவிற்கு புதிய சின்னம்!

    மஹாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா அணிக்கு ‘இரட்டை வாள் மற்றும் கேடயம்’ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். நேற்று ஏக்நாத் அணிக்கு ‘பாலாசாகேபஞ்சி சிவசேனா’ என பெயர் ஒதுக்கப்பட்டது.

    16:38 (IST)

    டி20 ஒருநாள் போட்டி: 99 ரன்களில் தென் ஆப்ரிக்க அணி ஆல் அவுட்.. 

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அபார பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்கா அணி 99 ரன்களுக்கு சுருண்டது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    16:23 (IST)

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நரிக்குறவர் தீக்குளிப்பு!

    காஞ்சிபுரம் படப்பையை சேர்ந்த வேல்முருகன்(45) என்கிற நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த நபர், சாதி சான்றிதழ் கேட்பதற்காக நீதிமன்றத்தில் இருக்கும் சட்ட உதவி மையத்திற்கு வந்துள்ளார். சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

    16:12 (IST)

    கொலை வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை

    கொலை வழக்குகளை சட்டம் ஒழுங்கு காவல்துறையினரே விசாரித்து வரும் நிலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும் காரணத்தால், அதனை விசாரிக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது. மேலும் இதுகுறித்து தமிழ்நாடு டிஐஜி பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

    14:14 (IST)

    டாஸ் வென்றது இந்திய அணி

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது

    14:0 (IST)

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்  ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம்

    பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து  உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதிமுவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.