Today News in Tamil: உலகக்கோப்பை தொடர் - அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 22, 2022, 20:21 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 10 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    21:24 (IST)

    நவம்பர் 24 முதல் ₹1000 வழங்கப்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    மயிலாடுதுறை மாவட்டத்தில், கனமழை காரணமாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததையடுத்து, நவம்பர் 24ஆம் தேதி முதல் நியாய விலைகடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார். 

    21:13 (IST)

    அரசு கேபிள் டிவி சீரடைந்தது 

    அரசு கேபிள் டி வி ஒளிபரப்பு முழுவதுமாக சரி செய்யப்பட்டுவிட்டது என அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

    17:44 (IST)

    உலககோப்பை தொடர் - அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி

    உலககோப்பை கால்பந்து தொடரில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது அர்ஜென்டினா.

    17:30 (IST)

    கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் இல்லை

    மதுரை திருமங்கலத்தில் உள்ள கப்பலூர் சுங்க சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆண்டுகளாக அப்பகுதி வாசிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கப்பலூர் சுங்க சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வந்தனர்.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு, கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் இல்லை என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார். 

    17:3 (IST)

    விசாரணைக்கு சென்று திரும்பிய இளைஞர் தற்கொலை விவகாரம் : எஸ்.ஐ. ஆயுத படைக்கு மாற்றம்!

    திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் ராகுல்ராஜ்ம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்து சென்ற வந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் மகாலட்சுமியை ஆயுதப் படைக்கு மாற்றி திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    16:16 (IST)

    அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு   

    அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய  5 மாவட்டங்களில் மழைக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

    15:0 (IST)

    அவ்வை நடராசன் உடலுக்கு அரசு மரியாதை

    தமிழறிஞர் அவ்வை நடராசன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், பாடலாசிரியர் வைரமுத்து  உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 30 குண்டுகள் முழங்க மைலாப்பூர்  மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம்.

    14:11 (IST)

    விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படும்!

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள திருக்கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும்.

    - அமைச்சர் சேகர்பாபு

    12:9 (IST)

    மங்களூரு குண்டு வெடிப்பு: ஷாரிக் வாட்ஸ்அப்பில் ஈஷா சிவன் படம்!

    மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக், தனது வாட்ஸ்அப் டிபியில் ஈஷா மையத்தில் உள்ள சிவன் சிலையை வைத்துள்ளார். தனது அடையாளத்தை மறைக்க இவ்வாறு செய்திருக்கலாம் என தகவல்.

    11:21 (IST)

    ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் ஒப்புதல் தரவில்லை!

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என தெரிவித்துள்ளார்.