கேரளாவில் 3வது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி!

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | July 22, 2022, 16:08 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 10 MONTHS AGO

    AUTO-REFRESH

    16:54 (IST)

    68வது தேசிய விருது வழங்கும் விழா: 

    சிறந்த நடிகர் விருது சூரரைப் போற்று படத்துக்காக சூர்யா பெறுகிறார்

    சிறந்த திரைக்கதை - சூரரைப் போற்று திரைப்படம் தேர்வு

    சிறந்த தமிழ் திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் தேர்வு

    16:43 (IST)

    25ல் குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார் திரெளபதி முர்மு 

    நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக வரும் 25ம் தேதி பதவியேற்கிறார் திரெளபதி முர்மு. நாடாளுன்றத்தில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    15:58 (IST)

    கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

    கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு திரும்பிய 3வது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    14:1 (IST)

    வருவாய்த்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

    வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்.

    13:53 (IST)

    23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

    12:50 (IST)

    நாளை காலைக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்கிறோம் 

    கனியாமூர் பள்ளி மாணவியின் உடலை நாளை காலை 6 -7 மணிக்குள் பெற்றுக்கொள்கிறோம் என பெற்றோர் தரப்பு தகவல். நீதிபதி கெடு விடுத்த நிலையில் பெற்றோர் தரப்பு நீதிமன்றத்தில் தகவல். மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு நாளையே அடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி கூறீனார். இறுதி ஊர்வலத்தின் போது காவல்துறையின் பாதுகாப்பு அவசியமில்லை என பெற்றோர் தரப்பு தகவல்

    12:4 (IST)

    செஸ் ஒலிம்பியாட் - முதல்வர் ஆலோசனை

    செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. அமைச்சர்கள் எ.வ.வேலு, மெய்யநாதன், மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

    11:47 (IST)

    கனியாமூர் பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை ஒப்படைக்கும் மக்கள் 

    9:54 (IST)

    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. cbseresults.nic.in என்ற இணையத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்

    9:14 (IST)

    நெல்லையப்பர் திருக்கோவிலில்  ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

    நெல்லை  காந்திமதி அம்பாள் உடனுறை  நெல்லையப்பர் திருக்கோவிலில்  ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.