மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது 6வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் அஞ்சலி செலுத்தும் விதமாக ட்வீட் செய்திருந்தார்.
பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை...
துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்.#Jayalalitha
(File Photo) pic.twitter.com/blHAJfLe91
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 5, 2022
அதில், “பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிரூபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jayalalitha, Jayalalithaa memorial, Tamilisai Soundararajan