தேர்தல் வாக்குறுதிகளை
திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும்
பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டு இருந்தது. வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் அங்கு உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உண்ணாவிரத்தில் அண்ணாமலை
அதனையடுத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதேபோல, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், திருச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் வானதி ஸ்ரீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘உதயநிதிக்கு அமைச்சர் பதவி காத்திருப்பதை போல இங்கே ஒரு ஷிண்டே புறப்படுவார். 2024-ல் தமிழகத்தில் நிச்சயம் 25 எம்.பி.க்களை பாஜக உருவாக்கும். 25 எம்.பிக்களை நாம் உருவாக்கினால் தான் 180 சட்டமன்ற உறுப்பினர் பெற்று 2026-ல் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும்.
டிசம்பர் 31ம் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ஜனவரி1ம் தேதி பாதயாத்திரை துவங்கி டிசம்பர்31ம் தேதி கோபாலபுரம் பகுதியில் பாதயாத்திரை முடிவடையும். ஒரு வருடம் குடும்பம் சம்பாத்தியம் அனைத்தையும் விட்டுவிட்டு பாதயாத்திரையில் பா.ஜ.க தொண்டர்கள் தயராக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து மாதம் அதற்காக தயாராகுங்கள்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.