நிதியமைச்சர் சீதாராமன், தனது நீண்ட பட்ஜெட் உரையில் சிந்து சமவெளி நாகரிகத்தை, சரஸ்வதி சிந்து நாகரிகம் என மாற்றி பேசியதைக் குறிப்பிட்டு, ”இந்திய வரலாற்றுக்கு காவி சாயத்தைப் பூசி திரிக்கவேண்டாம்” என்று விமர்சித்துள்ளார் மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி.
சிந்து சமவெளி நாகரிகத்தை, சரஸ்வதி சிந்து நாகரிகம் எனக் குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்த கனிமொழி கருணாநிதி, “
தற்கால இந்தியாவுக்கு காவி சாயம் பூசிக்கொண்டிருப்பதுடன், கடந்த கால இந்தியாவுக்கும் காவி சாயம் பூசும் வேலையைச் செய்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட சரஸ்வதி சிந்து நாகரிகம் எந்த வரலாற்று அறிஞர்களாலும் சொல்லப்படாத விஷயம். அதனால், இதை அறிஞர்களிடம் விட்டுவிட்டு அரசியல்வாதிகளும், பாஜக உறுப்பினர்களும் இப்படிப் பேசுவதிலிருந்து விலகி இருக்கவேண்டும்” என்று தனது பட்ஜெட் விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
”பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, 50,000 சிறு, குறு, நடுத்தர வணிகங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. மத்திய அரசு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. வருடாந்திர பொருளாதார சதவிகிதமே 5 சதவிகிதமாக இருக்கும்போது, எப்படி இதைச் சாதிக்கப்போகிறீர்கள்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் எம்.பி கனிமொழி கருணாநிதி.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.