இதையும் படிங்க: பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா
குற்றச்சாட்டில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தேன். ஆகவே அந்த வீடியோ பதிவுகளை தங்களிடம் காட்சிப்படுத்தினால் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறினேன். ஆனால், அவர் பதிவுகளை என்னிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த நாள் தன்னை மறுபடியும் அலுவலகத்தில் சந்தித்த மதன் ரவிச்சந்திரன், அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறியுள்ள அண்ணாமலை, “ ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை மட்டும் நம்பி, அதன் உண்மைத் தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதன் மேல் விசாரணை செய்யாமல் குற்றம்சாட்டும் நபரின் வாய் வார்த்தையை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்” என்று வினா எழுப்பியுள்ளார்.
மேலும், “மூன்றாவது முறையாக அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி நான் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி உடனடியாக நியாயம் கிடைக்குமா, நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்டிருந்தார். கட்சி ரீதியான நடவடிக்கை என்ற முடிவையும் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தான் வீடியோ பதிவுகளை வெளியிடப்போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார்.
குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில், "செய்துகொள்ளுங்கள்" என்று சுருக்கமாக முடித்துவிட்டேன்” என்று அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
கே.டி.ராகவன் கூறியது என்ன?
இன்று காலை கே.டி. ராகவனிடம் பேசியதாகவும் 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சிப் பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் எண்ணத்துடன் உயர் தொழில்நுட்பத்தில் தன் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும் இதைத் தான் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் கே.டி. ராகவன் தெரிவித்ததாகவும் கட்சியின் மாண்பையும் செம்மையையும் கருதி கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கே.டி.ராகவனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, கே.டி. ராகவன் இந்தப் பிரச்னையை முறைப்படி சட்ட ரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மதனுக்கு உள்நோக்கம் ?
மேலும், மதன் ரவிச்சந்திரன் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் இதுபோல இன்னும் பல நபர்களின் பதிவுகளும் வெளிவரவிருக்கிறது என்று சொல்லியிருப்பது அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அண்ணாமலை ஐயம் தெரிவித்துள்ளார்.
”பாரம்பரியத்தையும் மரபையும் கட்டிக்காக்கும் பா.ஜ.கவின் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் உள்ள பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரம்: காங்கிரஸ் எம்பி ஜோதிமணி டிஜிபி அலுவலகத்தில் புகார்
இதுபோல குற்றம்சுமத்தப்பட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த பா.ஜ.கவின் மாநிலச் செயலர் மலர்க்கொடி தலைமையில் விசாரணை குழு அமைத்து சாட்டப்படும் குற்றங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இந்த வீடியோ பதிவின் இறுதியில் தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஒரு சில நபர்கள்தான் காரணம் என்றும் மதன் கூறியிருக்கிறார்.
நான் மூன்று முறை வலியுறுத்தியும் கட்சியின் தலைவருக்கும் அமைப்புச் செயலாளருக்கும் ஆதாரங்களைக் காட்சிப் படுத்தாமல், தன் சொல்லை மட்டும் நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திய மதனுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பா.ஜ.க. எப்படி பொறுப்பேற்க முடியும்? அவரவர் செயலுக்கும் அவரவர் நடவடிக்கைக்கும் அவரவரேதான் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.