தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. மேலும், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப்பேரவையில் நேற்று எதிரொலித்தது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்தப் பிரச்னையை நேரில் ஆராய தமிழ்நாட்டிற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க; வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை, வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை... அரசு எச்சரிக்கை..!
இந்நிலையில், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக பீகார் மாநில கிராம வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன், தொழிலாளர் நலத்துறை சிறப்பு செயலாளர் ஸ்ரீ அலோக் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இடம்பெற்றுள்ளனர்.
இதில், பாலமுருகனும், கண்ணனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் குழுவினர் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-யுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், பீகார் மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடம் பேசுவதுடன், பீகார் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு உள்ளூர் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பீகார் மாநில அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவும் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar, Tamilnadu government