பொங்கல் தொகுப்பு குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக
பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கில் நிர்மல்குமாருக்கு
சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
பொங்கல் தொகுப்பாக, தமிழக அரசு தரமற்ற பொருட்களை வினியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் ஏராளமான பதிவுகள் வெளியாகின. அதற்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்திருப்பது போல, போலியாக கடிதம் ஒன்றும் பரவியது. இந்த பதிவை சமூகவலைதளத்தில் பாஜக ஐ டி பிரிவு பரப்பியதாக புகார் எழுந்தது.
அந்தப் புகார் தொடர்பாக பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, கடந்த 8ம் தேதி நிர்மல் குமார் சென்னை வேப்பரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: அசைவ உணவு உண்டதற்காக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பு தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நிர்மல் குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கவும்,
தேவைப்படும் பொழுது போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் மற்றும் ₹25000 பிணை தொகையாக செலுத்த உத்தரவு ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.