நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்தாண்டு செப்டம்பர் 25-ம் தேதி அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை 3 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எனினும், விசாரணை முடிவடையாததால் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு 6 மாத காலம் அவகாசம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்தக் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்னும் விசாரணை முடிவடையாததால், மேலும் 4 மாத கால அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே ஆணையத்தின் விசாரணைக்காக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இன்று நேரில் ஆஜரானார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Appolo Hospital, Arumugasamy commission, Jayalalithaa, Jayalalithaa Dead