முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அப்போலோ மருத்துவர்களிடம் விசாரிக்க தடைகோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

அப்போலோ மருத்துவர்களிடம் விசாரிக்க தடைகோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என அப்பல்லோ நிர்வாகம் நீதிமன்றத்தில் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக தங்கள் மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த, தடை கேட்டு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால், ஆணையத்தில் மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் என்று அப்போலோ நிர்வாகம் கூறியது.

அதனைத்தொடர்ந்து மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது. மேலும் அந்த மனுவில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

ஆறுமுகசாமி, Arumugaswamy
நீதிபதி ஆறுமுகசாமி

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Also see... தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: தேர்தல் ஆணையர்கள் பங்கேற்பு 

வயநாட்டு தொகுதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்!

Also see... ரஜினி VS கமல்.. ரஜினியின் ஆதரவுக்காக காத்திருக்கிறாரா கமல்

Also read...

POINTS TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULTS TABLE:

SCHEDULE TIME TABLE:

Also read...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Apollo hospital, Arumugasamy commission, Jayalalithaa Dead