அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள சோழன்குடிக்காடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி இடைவேளை நேரத்தில் மாணவர்கள் கழிவறைக்கு செல்லும்போது காம்பவுண்ட் ஓரத்தில் இரண்டு பாம்புகள் இருந்ததை கண்டு மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து இந்த தகவல் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் வந்து பார்த்தபோது அடுத்தடுத்து மேலும் 4 பாம்புகள் பள்ளி வளாகத்திற்குள் சுற்றித்திரிந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக செந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பள்ளி வளாகத்தில் தென்பட்டது மஞ்சள் சாரை வகை பாம்புகள் எனக் கூறப்படுகிறது. பள்ளிக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் பள்ளி வளாகத்தில் வேறுஎங்கும் பாம்புகள் உள்ளதா எனத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: கலைவாணன் ( அரியலூர்)
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.