ஆரணி அருகே வீட்டை பூட்டு கொண்டு ஓரே குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் மாந்தரீகம் செய்து நரபலி கொடுப்பதாக வதந்தி பரவியதால் போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் கதவை உடைத்து அதிரடியாக 6 பேரை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி.நகரம் ஊராட்சிக்குபட்ட தசராப்பேட்டை பகுதியை சேர்ந்த தவமணி- காமாட்சி தம்பதியினருக்கு பூபாலன், பாலாஜி என்ற 2 மகனும் கோமதி என்ற மகளும் உள்ளனர். இதில் பூபாலனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த காளிப்பிரியா என்பவருடன் காதல் திருமணம் செய்துகொண்டு இருவரும் சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோமதி என்பவருக்கும் அரியப்பாடி கிராமத்தை சேர்ந்த மின்சாரதுறை பணியாளர் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதம் முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கோமதி என்பவருக்கு பேய் பிடித்திருப்பதாகவும் இதனால் காளியம்மன் சிறப்பு மாந்தரீகம் பூஜையை செய்ய தவமணி உள்ளிட்ட ஓரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டி கொண்டு மாந்தரீகம் செய்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சத்யா கொலை வழக்கில் கைதான சதீஷுக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்…
மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் தவமணி குடும்பத்தினரை அழைத்தும் வெளியே வரவில்லை. இதனால் பொதுமக்கள் சந்தேகமடைந்து கோமதியின் கணவர் பிரகாஷின் உறவினர் மூலம் வீட்டை திறக்க முயன்ற போது வீட்டை திறக்காத காரணத்தினால் பிரகாஷின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் தவமணி வீட்டிற்கு சென்று கதவை திறக்க முயன்ற போது வீட்டின் உள்ளே இருந்து யாரும் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
இதனையொடுத்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் வீட்டின் முன்பக்க கதவை உடைத்துஉள்ளே சென்று 6 பேரையும் ஆரணி தாலுக்கா போலீசார் அதிரடியாக மீட்டனர். இதனை தொடர்ந்து எங்கள் குடும்பத்திற்கு மாந்தரீகம் யாரோ வைத்துள்ளதாகவும் இதனால் பூஜை செய்து எடுக்க போவதாகவும் கூறினார்கள்.பின்னர் மீட்க வந்த போலீசாரை தவமணி குடும்பத்தினர் தாக்க முயன்றனர். நரபலி கொடுப்பதாக காட்டு தீ போல் தகவல் பரவியதால் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: ம.மோகன்ராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arani, Human Sacrifice, Thiruvannamalai