வங்கக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால், அரக்கோணம் முகாமில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைகின்றனர்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம், வட தமிழகத்தை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை 04வது படை பிரிவில் இருந்து 6 குழுக்கள்
1.நாகப்பட்டினம்
2.தஞ்சாவூர்
3.திருவாரூர்
4.கடலூர்
5.மயிலாடுதுறை
6.சென்னை
ஆகிய மாவட்டத்திற்கு 25 பேர் கொண்ட 6 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கொள்ள தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் படை பிரிவின் கமாண்டன்ட் அருண் உத்தரவின் பேரில் விரைகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Weather News in Tamil