Breaking News Today: வடசென்னையில் 10 கோடி மதிப்பில் குத்துச்சண்டை வளாகம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Latest Tamil News Live Update | இன்றைய (21-04-2022) முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழ் உடன் இணைந்திருங்கள்..

  • News18 Tamil
  • | April 21, 2022, 14:04 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A YEAR AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    14:7 (IST)

    Mount Everest-யில் ஏறுவதற்கு தேர்வான, Chennai தமிழ்ப் பெண் Muthamizh Selvi-க்கு உற்சாக வரவேற்பு

    14:0 (IST)

    மனைவியை வெட்டி கொலை செய்து கணவன் தற்கொலை - போலீஸாருக்குத் தெரியாமல் உறவினர்கள் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றபோது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த மேலூர் கிராமத்தில் விவசாயி வெங்கட்ராமன் (55 ) என்பவர் தனது மனைவி சரஸ்வதியை (50) வெட்டிக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இருவரது சடலத்தையும் போலீஸாருக்குத் தெரியாமல் எரியூட்ட உறவினர்கள் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற நிலையில் தா.பேட்டை போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    13:58 (IST)

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலகருப்பூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொண்டவர்கள் மீது கதண்டு விஷவண்டு தாக்குதல். 24 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பாலையூர் போலீசார் விசாரணை.

    13:50 (IST)

    உதவிக்கு ஏங்கும் HIV தொற்றாளர்கள் 

    13:48 (IST)

    அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தலில் அதிமுக கரூர் மாவட்ட கழக செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் M.R விஜயபாஸ்கர் போட்டியின்றி தேர்வு.

    13:48 (IST)

    விருதுநகர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஜூனத் அகமது என்பவர் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்  விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு.

    13:37 (IST)

    மதுரையில் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெரும் பிரபல கல்லூரியில் மாணவர்கள் சாலை மறியல

    மதுரை நாகமலை புதுக்கோட்டை சாலையிலுள்ள அரசு உதவி பெறும் பிரபல கல்லூரி கல்வி கட்டணம் அதிகமாகி வசூலிப்பதாகவும், கல்லூரி மாணவரை ஆசிரியர் தாக்கியதாகவும் கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்

    13:4 (IST)

    குழந்தைகள் சாப்பிடும் ஊசி சாக்லேட்டுகள் - Food Inspector ஆய்வு

    12:56 (IST)

    ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு போட்டிகளில் பதக்கங்களை ஊக்குவிக்க 4 ஒலிம்பிக் அகாடமிக் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிகளும் 3 கோடி ரூபாய் மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் 

    12:54 (IST)

    மதுரை வண்டியூர் கண்மாயைத் தூர்வாரி தீவு போன்ற அமைப்பை பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஏற்படுத்தப்படும் - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 

    சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய மதுரை வடக்கு எம்.எல்.ஏ., தளபதி, மதுரை வண்டியூர் கண்மாயை தூர்வாரி கரையை அகலப்படுத்துவதோடு, சுற்றுலாத்தலமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மதுரை வண்டியூர் கண்மாயைத் தூர்வாரி தரையினை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதே போன்று கண்மாயின் மறுபக்கம் தீவு போன்ற 3 அமைப்புகள் உருவாக்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொண்டு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கண்மாயை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.