முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்: அப்பல்லோ மருத்துவமனை மனு!

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்: அப்பல்லோ மருத்துவமனை மனு!

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால், ஆணையத்தில் மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் எனவும், உயர் நீதிமன்றத்தை நாட இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.

ஆறுமுகசாமி, Arumugaswamy
நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சசிகலாவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

Also see...

First published:

Tags: Arumugasamy commission, Jayalalithaa Dead