முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓ.பி.எஸ் தாயார் மறைவு... ஓ.பன்னீர் செல்வம் இல்லத்துக்கு சென்று ஆறுதல் சொன்ன அண்ணாமலை

ஓ.பி.எஸ் தாயார் மறைவு... ஓ.பன்னீர் செல்வம் இல்லத்துக்கு சென்று ஆறுதல் சொன்ன அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

தேனியிலுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்துக்குச் சென்று தாயின் மறைவுக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தேனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர் பிப்ரவரி 24-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 96. அதனையடுத்து,

இதுகுறித்து தகவல் அறிந்த ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்று பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பெரியகுளம் சென்றடைந்தார்.

வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த தனது தாயின் உடலை கண்டதும் துக்கத்தில் கண்ணீர் சிந்திய அவர், தனது தாயின் காலை பிடித்து கதறி அழுதார். இதனை தொடர்ந்து உசிலம்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மறைந்த பழனியம்மாளின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அண்ணாமலை ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வத்தின் தாய் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்தநிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தேனியிலுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தமிழக முன்னாள் முதலமைச்சர், அண்ணன் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்குச் சென்று, அவரது தாயார் பழனியம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.

இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மன வலிமையை அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற இறைவனை வேண்டுகிறேன். தாயாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Annamalai, O Panneerselvam