சாா்ஜா செல்லும் கணவரை வழியனுப்ப சென்னை விமான நிலையம் வந்த ஆந்திரா இளம் பெண் போலி விமான டிக்கெட் தயாரித்து, அதன் மூலம் சென்னை விமான நிலையத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து கணவரை விமானத்தில் அனுப்பி விட்டு வெளியே வந்தபோது பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கி கைது செய்யப்பட்டாா்.
சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து இன்று சாா்ஜா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்யவந்த பயணிகளின் டிக்கெட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.
அப்போது ஆந்திரா மாநிலம் நெல்லூரை சோ்ந்த நவாஸ் சேக்(25), அவருடைய மனைவி சனா(23) என்பவரும் ஒரே PNR ல் 2 பயணிகளுக்கான இ டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றனா். அதோடு பாதுகாப்பு சோதணை பகுதிக்குள்ளும் இருவரும் ஒன்றாகவே அதே இ டிக்கெட்டை காட்டி சென்றனா்.
இந்நிலையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு பின்பு இளம் பெண் சனா மட்டுமே தனியாக வெளியே வர வந்தாா். கேட்டில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்த பெண்ணை நிறுத்தி விசாரித்தனா்.அப்போது சனா நான் பயணத்தை ரத்து செய்துவிட்டேன். எனது கணவா் மட்டுமே பயணிக்கின்றாா் என்று கூறினாா்.அதோடு உள்ளே போகும்போது கேட்டில் காட்டிவிட்டு சென்ற இ டிக்கெட்டையும் காட்டினாா்.ஆனால் அந்த டிக்கெட்டில் பயணி ஆப்லோடு செய்யப்பட்டதற்கான எந்த முத்திரையும் குத்தப்படவில்லை.இதையடுத்து சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் இளம் பெண்ணை வெளியில் விடாமல் நிறுத்திவைத்து தீவிர விசாரணை நடத்தினா்.
அப்போது இளம் பெண் கூறியதாவது;
நாங்கள் சமீபத்தில் திருமணமான இளம் தம்பதி.எனது கணவா் வேலைக்காக சாா்ஜா செல்கிறாா்.அவரை வழியனுப்ப நானும் அவருடன் சென்னை விமானநிலையம் வந்தேன்.ஆனால் சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை. எனவே நாங்கள் எனது கணவரின் உண்மையான டிக்கெட்டை கலா் ஜெராக்ஸ் எடுத்து அந்த ஜெராக்ஸ் டிக்கெட்டில் எனது பெயரையும் இணைத்து போலியான இ டிக்கெட் தயாா் செய்து கொண்டுவந்திருந்தோம்.
அந்த போலி இ டிக்கெட்டை காட்டிதான் விமானநிலையத்திற்குள் பாதுகாப்பு சோதணை நடக்கும் பகுதி வரை ஒன்றாகவே சென்றோம்.அதன்பின்பு நானும் கணவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு அமா்ந்திருந்தோம்.பின்பு அவா் தனது உண்மையான டிக்கெட் மூலம் விமானத்தில் சாா்ஜாவிற்கு புறப்பட்டு சென்றாா்.நான் அதே போலி இ டிக்கெட் மூலம் வெளியே வந்தேன்.நான் செய்தது தவறு தான். மன்னித்துவிட்டுவிடுங்கள் என்று அழுது கெஞ்சினாா்.
ஆனால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா், ஆந்திரா இளம் பெண்ணை கைது செய்து,சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா்.போலீசாா் இளம் பெண்ணிடம் மேலும் திவீர விசாரணை நடத்துகின்றனா்.
ஆந்திரா இளம் தம்பதி கலா் ஜெராக்ஸ் மற்றும் போலி இ டிக்கெட் எந்த இண்டா்நெட் செண்டரில் எடுத்தனா். இவா்கள் இதற்கு முன்பு இதைப்போல் போலி டிக்கெட் தயாரித்துள்ளனரா? இந்த மோசடிக்கு இவா்கள் மட்டும் தான் காரணமா?அல்லது வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா?என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனா்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.