முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் அதேப் பெயரில் தொடர்ந்திருக்காது: முதல்வர் ஸ்டாலின்

காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் அதேப் பெயரில் தொடர்ந்திருக்காது: முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என நினைத்திருந்தால் அம்மா உணவகம் அதேப் பெயரில் தொடந்திருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என கடந்த கால ஆட்சியில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதாக அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Also read: திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி, “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என பெயர் மாற்றப்படும் - க.பொன்முடி

இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் எதிர்ப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து, ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எதிர்கட்சித்தலைவரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என நினைத்திருந்தால் அம்மா உணவகம் அதேப் பெயரில் தொடந்திருக்காது. அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று கூறினார்.

எனினும், முதல்வரின் விளக்கத்தை ஏற்காது பேரவையில் இருந்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TN Assembly