நாகை அடுத்த நாகூர் கௌதியா மேல்நிலைப்பள்ளி கட்டுமான பணி சில மாதங்களாக நிதி நெருக்கடியால் தடைபட்டதை அடுத்து அதற்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உதவியுள்ளனர். பொதுவாக படித்த பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி டீ பார்ட்டி வைப்பதும் கலைநகழ்ச்சிகள் வைப்பது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக நாகூரில் பள்ளியின் கட்டுமான பணிக்கு நிதி உதவி வழங்கி சந்திப்பு கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் முன்னாள் மாணவர்கள்.
நாகை அடுத்த நாகூரில் செயல்பட்டு வரும் கௌதியா மேல்நிலை பள்ளியில் தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் கடுமையாக சேதமடைந்தது. இந்த நிலையில் பள்ளியில் கான்கிரீட் மேற்கூரை அமைத்து புரணமைப்பு பணி நடைபெற்று வந்தது.
தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் நிதி பங்களிப்போடு கட்டிடபணிகள் நடந்து வந்த நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தகவல் அறிந்த பள்ளியில் 1993-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்று திரண்டு பள்ளியின் கட்டுமான பணிக்காக 1 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளனர்.
பள்ளிக்கு இன்று வருகை புரிந்த முன்னாள் மாணவர்கள் தாளாளர் அபுதல்ஹாவிடம் ஒரு லட்சம் ரூபாய் நிதியை வழங்கினர். நிதியளிப்பு நிகழ்வில், கெளதியா சங்கத்தின் செயலாளர் ரசீது, துணை செயலாளர் செய்யது, பொருளாளர் இஸ்மாயில் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.
நாகை அருகே பள்ளியின் கட்டுமான பணிக்காக முன்னாள் மாணவர்கள் ஒன்று திரண்டு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்து இருப்பதை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.