முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காணொளி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும்: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

காணொளி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும்: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

ஊரடங்கு முடியும் வரை உயர்நீதிமன்றம் இயங்காது என்றும், வழக்குகள் காணொளி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு முடியும் வரை உயர்நீதிமன்றம் இயங்காது என்றும், வழக்குகள் காணொளி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு முடியும் வரை உயர்நீதிமன்றம் இயங்காது என்றும், வழக்குகள் காணொளி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா ஊரடங்கு முடியும் வரை காணொளி காட்சி மூலமே வழக்குகள் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்குகளுக்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், போலீசார் மற்றும் உயர்நீதிமன்ற செய்தியாளர்கள் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அரசு தரப்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞரின் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், வழக்குகளின் விசாரணையின்போது நீதிமன்றத்திற்குள் வந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஊரடங்கு முடியும் வரை உயர்நீதிமன்றம் இயங்காது என்றும், வழக்குகள் காணொளி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

First published:

Tags: Chennai High court, CoronaVirus, Video calls