மாசு கட்டுப்பாடு வாாரியத்தின் இசைவாணை மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைகிற அனைத்து தொழிற்சாலைகளும் தொடர்ந்து ஜூன் 30 வரை ஆலைகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மற்றும் கழிவு மேலாண்மை மையங்கள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன.
இவை தொடர்ச்சியாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருப்பதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகள், திடக்கழி, மருத்துவக் கழிவு, மற்றும் அபாயகரமான கழிவுகளை மேலாண்மை செய்யும் மையங்கள் ஆகியவை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது.
இந்நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு தொழிற்சாலைகள் இசைவாணையை இயக்கிக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.