உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. காளைகள் சீறிப் பாய, காளையர்கள் அதனை அடக்க முயற்சிக்கும் காட்சிகளை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். 8வது சுற்று வரை 219 மாடுபிடி வீரர்கள் களம் கண்ட நிலையில், சில காளைகள் காளையர்களை தன் பக்கம் நெருங்கவிடாமல் களமாடின. சில காளைகள் தன்னை அடக்க முயன்ற காளையர்களை தூக்கிவீசிச் சென்றன.
ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, இலங்கை அமைச்சர் தொண்டைமான் என முக்கிய பிரமுகர்களின் காளைகளும் களமாடி வெற்றிவாகை சூடின. மதுரையைச் சேர்ந்தவரும் நடிகருமான சூரி சார்பில் 3 காளைகள் களமிறங்கின. முதல் காளை பிடிபட்ட நிலையில் மற்ற 2 காளைகளும் வெற்றிபெற்றன.
சூரியின் மாட்டை பிடித்தால் தங்க மோதிரம் பரிசளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், காளை வெளியே வந்ததும் அதனை பிடிக்க வீரர்கள் முயற்சித்தனர். ஆனால், காளை தன் பக்கம் யாரையும் நெருங்கவிடவில்லை. திமிலைப் பிடித்து அடக்க முயற்சித்தவர்களை சுழற்றியடித்தது. இதனை பார்வையாளர் மாடத்தில் இருந்து அமைச்சர் உதயநிதியும், சூரியும் சிரித்தபடி பார்த்து ரசித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Soori, Alanganallur, Jallikattu