அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சட்டமன்றத்தில் ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமாரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு கடிதம் அளித்தது. ஆனால், இதுவரை ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் அதிமுக தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுதொடர்பாக சபாநாயகர் இதுவரை முடிவு எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆளுநர் உரையுடன் நேற்று சட்டமன்றம் மீண்டும் கூடிய நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர். என்றாலும் ஒருவருக்கொருவர் கடைசி வரை முகம் கொடுக்கவே இல்லை. இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று சட்டமன்றம் கூடியது.
முன்னதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம் குறித்து அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து மீண்டும் மனு அளித்தனர். இதில், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதுபோலவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரை சந்தித்து இருக்கை தொடர்பாக வலியுறுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK, TN Assembly