திருச்சி என்.ஐ.டி மற்றும் இஸ்ரோ இடையே நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான விண்வெளி தொழில்நுட்ப மையமாக திருச்சி என்.ஐ.டி செயல்பட உள்ளது.
தேசிய தொழில்நுட்ப கழக இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், இஸ்ரோ திறன் மேம்பாட்டு திட்ட இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் திருச்சி என்.ஐ.டியில் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கையெழுத்திட உள்ளனர்.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி திட்டங்களும் திருச்சி என்.ஐ.டியில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இஸ்ரோவினுடைய ஆராய்ச்சி மையமாகவும் என்.ஐ.டி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.