தமிழகத்தில் தொடர்ந்து 13 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் அணைத்தும் திறக்கப்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி துவங்கி 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது விடுமுறை முடிந்து 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி காரணமாக ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் வாக்கு எண்ணும் பணி குறிப்பிட்ட நேரத்திற்குள் முடியாததால், தேர்தல் ஆணையம் கூறியதையடுத்து பள்ளிகள் திறப்பு ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 6-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
ஆசிரியர்கள் தொடர்ந்து தேர்தல் பணி மற்றும் ஓட்டு எண்ணிக்கை பணிகளை மேற்கொண்டதால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில், ஜனவரி 6-ம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது
இதன்படி 13 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து இன்று முதல் மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்பட உள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் முதல் நாளிலேயே மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று திருப்புதல் தேர்வு நடக்கிறது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.