இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.கவின் வெற்றித் தொடரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்துவருகிறது.
இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ‘கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் எண்ணம் பலிக்காது. மக்களின் மனநிலையை மு.க.ஸ்டாலின் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. சசிகலா, தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து அ.தி.மு.க பொதுக்குழுவில் பேசி முடிவு செய்யப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பா.ஜ.கவுடனான கூட்டணி தொடர்கிறது. டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். இடைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.கவின் வெற்றித் தொடரும்’ என்று தெரிவித்தார்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.