முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் : ஓபிஎஸ், இபிஎஸ் வேட்பு மனுக்கள் ஏற்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் : ஓபிஎஸ், இபிஎஸ் வேட்பு மனுக்கள் ஏற்பு

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு நேற்று முன்தினம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர் ஓமபொடி பிரசாத் சிங் அங்கிருந்த தொண்டர்களால் வெளியேற்றப்பட்டார்.

  • 1-MIN READ
  • Last Updated :

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு நேற்று முன்தினம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர் ஓமபொடி பிரசாத் சிங் அங்கிருந்த தொண்டர்களால் வெளியேற்றப்பட்டார்.

விதிகளை பின்பற்றாததாலும், முன்மொழிய, வழிமொழிய ஆட்கள் இல்லாததாலும் ஓமபொடி பிரசாத்துக்கு விருப்பமனு தரப்படவில்லை என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 2-வது நாளாக நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து நேற்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

Also Read : இனியும்‌ இதை எல்லாம்‌ பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.. கொதிக்கும் சசிகலா!!

அவர்கள் இருவரும் தங்கள் வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் ஆணையர்களான சி.பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் சமர்ப்பித்தனர். கட்சி விதிகளின்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை 15 பேர் முன்மொழிய வேண்டும், 15 பேர் வழிமொழிய வேண்டும். அந்த வகையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள் ஆகியோர் அவர்களின் பெயர்களை பரிந்துரை செய்தனர்.

Also Read : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: மெரினாவில் அதிமுகவினர் அஞ்சலி

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்ற நிலையில், ஓபிஎஸ் இபிஎஸ் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாளை வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஓபிஎஸ்,  இபிஎஸ் வேட்புமனுக்களை திரும்பப் பெறாத பட்சத்தில் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

First published:

Tags: ADMK, Edappadi palanisamy, O Panneerselvam