ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள
அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒற்றைத்தலைமை நெருக்கடிக்கு மத்தியில் கடந்த 23ம் தேதி, அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. ஆனால், அதில் நிறைவேற்றப்பட இருந்த அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. மீண்டும் வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.
இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவிற்கு தடைகோரி நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பதவிகளில் மாற்றம் கொண்டு வர தற்காலிக தடை கோரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நீதிமன்றத்தில் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், தேர்தல் ஆணையத்தை நாடவும் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
இதனிடையே புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்காததால் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் எழுதி உள்ளார். மேலும், அவர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகம் என்றும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.