ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னணியில்
சசிகலா உள்ளதாகவும்
எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையை ஏற்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாகவும்
தூத்துக்குடி முன்னாள் எம்பி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பி.யான ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுகவில் இரட்டைத் தன்மை இருப்பதால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். தொண்டர்களின் குழப்பத்தை நீக்க கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும். அதுவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்.
அவரால் தான் இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்ல முடியும். வரும் தேர்தலில் வெற்றியும் பெற முடியும். அதிமுக தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியையே ஏற்றுக் கொள்ள விரும்புகின்றனர். எனவே அவர்தான் இந்த இயக்கத்தின் தலைவராக வரவேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஓபிஎஸ் சுயநலவாதி என்று கட்சித் தொண்டர்கள் நினைக்கின்றனர்.வணங்கி பணிபவர்கள் எங்களுக்கு தேவையில்லை, துணிச்சலாக தொண்டர்களை பாதுகாக்கக்கூடிய தலைவரே இப்போது அதிமுகவிற்கு வேண்டும்.
இரட்டை தலைமையால் தொண்டர்களுக்கு எந்த ஒரு நன்மையும் நடக்கவில்லை.
இதையும் படிங்க: அதிமுக தோல்விக்கு இபிஎஸ் செயல்களே காரணம்.. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நாளிதழ்களில் விளம்பரம்
ஓபிஎஸ் கட்சியில் தனக்கு பதவி இல்லை என்றால் கட்சியை அழித்துவிடுவோம் என்ற மிரட்டும் தோனிக்கு போய் விட்டார். இது ஏற்புடையது அல்ல. ஓபிஎஸ் பின்னணியில் சசிகலா அம்மா வின் கை உள்ளது. ஓபிஎஸ் தனது மகனை மட்டுமே ஜெயிக்க வைத்துள்ளார். தனது மகனை ஜெயிக்க வைத்த அவருக்கு கூட 2 எம்பி ஜெயிக்க வைக்க தெரியாதா? அதை செய்யவில்லையே. பன்னீர்செல்வம் பின்னணியில் சசிகலா உள்ளார். ஓபிஎஸ் இடம் கட்சியை கொடுத்தால் அவர் கட்சியை பிஜேபிக்கு கொண்டு சேர்த்துவிடுவார் எனவும் விமர்சித்தார்.
செய்தியாளர்: முரளிகணேஷ்- தூத்துக்குடி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.