ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பான விசாரணையின் போது, இரு முறை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ராஜேந்திர பாலாஜி குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளதால், அவருக்கு ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்க கூடாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இந்த வழக்கில் 45 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி குற்றச்சாட்டு மிக கடுமையானது என குறிப்பிட்ட நீதிபதிகள், அவர் முக்கிய குற்றவாளியாக உள்ளதால் நீண்ட நாள் ஜாமின் வழங்க முடியாது என்றும் தெரிவித்தனர். அத்துடன், -தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajendra balaji, Supreme court