முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை

ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒரு கட்டமாக நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

  • Last Updated :

தமிழக சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தலுடன் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்ட தேர்தல் ஆணையம், 2021ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களைத் தயார் செய்வது, கூடுதல் வாக்குச்சாவடிகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளிலும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது கொரோனா தொற்று இருப்பதால், அதற்கேற்ப கூடுதலாக வாக்குச்சாவடிகளை உருவாக்குவது பற்றியும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு சென்னை வந்தது. விமான நிலையத்தில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரவேற்றார்.

Also read: பொதுப்பிரிவு இடஒதுக்கீடு ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமல்ல.. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

பின்னர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எப்போது நடத்துவது என்றும், எத்தனை கட்டங்களாக நடத்தலாம் என்றும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக சட்டமன்ற தேர்தலை ஏப்ரலில் மூன்று அல்லது நான்காவது வாரத்தில் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என முறையிட்டிருப்பதாக தெரிவித்தார். திமுக சார்பிலும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு, மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமையன்று, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், உளவுப்பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: ADMK, Pollachi Jeyaraman, TN Assembly Election 2021