தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இச்சூழலில் தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமருக்கு,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று சென்னையின் புறநகர் பகுதி தொடங்கி கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் பிற பகுதிகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழல் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். சாலைகளில் மூன்று அடிவரை வெள்ள நீர் தேங்கியுள்ளன.
நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் நீர் நிலைகளில் நீர் இருப்பு உயர்ந்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் மத்திய அரசின் உதவி கிடைத்தால் தமிழக மக்கள் நன்றியுடன் இருப்பார்கள். சீரமைப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி தேவை. எனவே, நிவாரணம், மீட்பு மற்றும் மீள் சீரமைப்பு பணிகளுக்காக தமிழத்திற்கு தேவையான நிதியை விடுவிக்கும்படி நிதி அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் மிதக்கும் வடசென்னை.. வீட்டை காலி செய்து இடம்பெயரும் மக்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.