அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் நதிநீர் இணைப்புக்கு குரல் எழுப்பப்படும்!
அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் நதிநீர் இணைப்புக்கு குரல் எழுப்பப்படும்!
எடப்பாடி பழனிசாமி
தான் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை அறிந்தவன் என்றார் முதலமைச்சர் பழனிசாமி. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் படும் கஷ்டம் தெரியாது எனவும் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால், நாடாளுமன்றத்தில் நதிநீர் இணைப்பு குறித்து முதல் குரல் எழுப்பப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக, அதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.சிவபதிக்கு ஆதரவாக, முசிறி பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தான் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை அறிந்தவன் என்றார். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் படும் கஷ்டம் தெரியாது என கூறினார்.
மேலும், அவர் போல் எந்தவொரு பிரச்னையையும் தீர்ப்பேன் என சொல்விட்டு மட்டும் போகாமல், செயலில் காட்டுவேன் என்றும் தெரிவித்தார். எனவே, தங்கள் கூட்டணியை வெற்றிபெற வைத்தால் விவசாய பிரச்னைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.
இதனிடையே, முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டிருந்த பகுதி வழியாக சைரன் ஒலி எழுப்பியவாறு ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை அறிந்த அவர், தனது பேச்சை நிறுத்திவிட்டு, ஆம்புலன்ஸ் செல்வதற்கு ஏதுவாக கூட்டத்தை செம்மைப்படுத்தினார்.
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.