காளிகாம்பாள் கோவிலிக்கு வந்த சென்னை மேயரை சந்தித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்!
காளிகாம்பாள் கோவிலிக்கு வந்த சென்னை மேயரை சந்தித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், மேயர் பிரியா.
சாமி தரிசனம் செய்வதற்காக காளிகாம்பாள் கோவிலுக்கு வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரையும் மேயர் பிரியா தற்செயலாக கோயிலில் சந்தித்து பேசினார்.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகம்மாள் கோவிலில், சாமி அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து அங்கிருக்கும் 50க்கும் மேற்ப்பட்ட பக்தர்களுக்கு தன் கையால் அன்னதானத்தை வழங்கினார்.
மேலும், சாமி தரிசனம் செய்வதற்காக காளிகாம்பாள் கோவிலுக்கு வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரையும் மேயர் பிரியா தற்செயலாக கோயிலில் சந்தித்து பேசினார். பின்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சாமி தரிசனத்திற்காக இங்கு வந்ததாக தெரிவித்தார். நடிகை நயன்தாரா சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கோவிலில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.