முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தங்குமிடத்தை அடிக்கடி மாற்றும் மீராமிதுன்.. ஒரு விவரமும் கிடைக்கல.. கோர்ட்டில் தகவல் சொன்ன போலீசார்!

தங்குமிடத்தை அடிக்கடி மாற்றும் மீராமிதுன்.. ஒரு விவரமும் கிடைக்கல.. கோர்ட்டில் தகவல் சொன்ன போலீசார்!

நடிகை மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் மீரா மிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாகவும், அவர் தலைமறைவாக உள்ள இடம் குறித்து எந்த விபரங்களும் கிடைக்கவில்லை என சென்னை காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருவதால் அவரை கைது செய்ய முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீரா மிதுன் தலைமறைவான நிலையில் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Also see...கிள்ளனூர் பகுதியில் உள்ள கோயிலில் திருடிய கும்பலை பிடித்த பொதுமக்கள்..

2 மாதங்களுக்கு மேலாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் கைது செய்யாமல் இருப்பதால்  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக மீரா மிதுன் தலைமறைவான நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று லுக்-அவுட் கொடுக்க இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மீராமிதுனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் ஷியாமளா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actress Meera Mithun