ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது உண்மை தான் ஆனால் தட்டுப்பாடு இல்லை என அன்புமணி ராமதாஸ் கருத்திற்கு அமைச்சர் நாசர் பதிலளித்துள்ளார்.
ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பால் விலை உயர்த்தப்பட்டதால் ஆவின் பச்சை நிற பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.
இது குறித்து அமைச்சர் நாசரிடம் கேள்வி எழுப்பியபோது, அந்த கருத்து உண்மை இல்லை எனவும் பால் விற்பனை அதிகரித்துள்ளது தான் உண்மை, தேவைக்கு ஏற்ப பூர்த்தி செய்யும் வகையில் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ ஃபுல் கிரிம் பால் லிட்டருக்கு ரூ.12 விலை உயர்த்தபட்டுள்ளது. பிறமாநிலங்களில் ரூ.70க்கு விற்கப்படும் நிலையில் ஆவினில் ரூ.60க்கு தான் விற்கப்படுகிறது. மேலும் பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஆவின் பாலின் விலை ரூ.10 குறைவாகவே உள்ளது. அதுவும் சந்தா அட்டைதாரர்களுக்கு ரூ.46 என்ற விலையில்தான் தற்போது வரை விநியோகம் செய்யப்படுகிறது” என தெரிவித்தார்.
மேலும் வாணிப நோக்கு விற்பனைக்கு மட்டுமே ரூ. 60 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தகூடிய நீலநிறம் மற்றும் பச்சை நிற பால் விலை எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் குறைக்கப்பட்ட விலையிலே விநியோகித்து வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aavin, Anbumani ramadoss, Milk