முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்..!

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்..!

EB ஆதார் இணைப்பு

EB ஆதார் இணைப்பு

மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய மின் இணைப்பை பெற்றிருக்கும் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாநில அரசு அறிவித்தது. இணைப்புப் பணிகள், நவம்பர் 15-ம் தேதி தொடங்கின. 2 ஆயிரத்து 800 குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதை படிங்க: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்..!

இதனைத் தொடர்ந்து, அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இதுவரை 99 சதவீதம் பேர் தங்களது மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், மின் வாரியம் அளித்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

மீதமுள்ள உரிமையாளர்கள், ஆதார் எண்ணை இன்றே இணைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

First published:

Tags: Aadhaar card, Electricity bill