சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் அமைந்துள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகாரளித்துள்ளனர்.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் சிறையில் அடுக்கப்பட்டுள்ளார். இதேபோல் சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உளவதாக, முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 900 பேர் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், ‘செட்டிநாடு பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது. பாலியல் ரீதியாகவும், உடல் அமைப்பையும் வைத்தும், கெட்ட வார்த்தைகளால் திட்டியும் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படாதது கண்டனத்திற்குரியது. பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத என பலர் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் ஒன்று கூட இதுவரை விசாரிக்கப்படவில்லை.
இதுபோன்று புகாருக்கு உள்ளாகக் கூடிய ஆசிரியர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்று பாதிக்கப்படும் மாணவர்களை அழைத்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முழுமையாக பள்ளி நிர்வாகமே பொறுப்பாக வேண்டும். பழைய புகார்கள் குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று என்றும் மாணவர்களின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கும் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் ஜூன் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.