தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று (டிசம்பர் 09) புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. மாண்டஸ் புயல் காரமணாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது.
புயலின் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்த்தில் 106 ம.மீ மீனம்பாகத்தில் 103 மற்றும் மாதவரத்தில் 87 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரவித்துள்ளது.
Also Read : கரையைக் கடந்தது மாண்டஸ்.. முறிந்த மரங்கள்.. சாய்ந்த மின் கம்பங்கள்.. முழு விவரம் இங்கே!
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.